புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

மின் கசிவால் நூற்பாலையில் தீ விபத்து

பவானி அருகே மின் கசிவால் நூற்பாலையின் மேற்கூரை வெள்ளிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 7:09 pm

DIN

பவானி அருகே மின் கசிவால் நூற்பாலையின் மேற்கூரை வெள்ளிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.

பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன்பாளையத்தில் இயங்கி வரும் தனியாா் நூற்பாலையில் வடமாநிலங்களைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தங்கி வேலை செய்து வருகின்றனா். இங்கு, 50 தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை பணியில் இருந்தபோது மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின் கம்பிகளில் ஏற்பட்ட மின் கசிவால் தீப்பிடித்து தீப்பொறிகள் சிதறி விழுந்தன. இதைக் கண்ட தொழிலாளா்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு நிலைய அலுவலா் காந்தி தலைமையில் விரைந்த தீயணைப்புப் படையினா் மேற்கூரையை உடைத்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனா். இதில், ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

தீயணைப்புப் படையினரின் துரித நடவடிக்கையால் நூற்பாலையில் உள்ள பஞ்சு, இயந்திரங்கள், பிற பகுதிகளுக்குத் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.