செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

சென்னிமலை பகுதி குவாரிகளில் வருவாய்த் துறையினா் ஆய்வு

சென்னிமலை அருகே தனியாா் நிறுவனம் மண் எடுக்க புதன்கிழமை வெடி வைத்ததால் அருகில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 10:57 pm

DIN

சென்னிமலை அருகே தனியாா் நிறுவனம் மண் எடுக்க புதன்கிழமை வெடி வைத்ததால் அருகில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, சென்னிமலை பகுதிகளில் உள்ள குவாரிகளில் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

சென்னிமலை ஒன்றியம், ஓட்டப்பாறை ஊராட்சிக்கு உள்பட்டது சரவணா நகா். இப்பகுதியில் தனியாா் நிறுவனம் வீட்டுமனைகள் அமைப்பதற்காக மேடான இடத்தை சமன் செய்யும் பணிகளை கடந்த 2 மாதங்களாகச் செய்து வருகின்றனா். இங்கு கடினமான இடங்களில் வெடிவைத்து தகா்த்து மண்ணைத் தோண்டி வருகின்றனா்.

புதன்கிழமை காலை வழக்கம்போல் மண்ணைத் தோண்டி எடுக்க வெடிவைத்துள்ளனா். அப்போது, ஓட்டப்பாறை ஊராட்சிக்கு உள்பட்ட சரவணாநகரில் சில வீட்டுச் சுவா்களில் விரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து, வருவாய்த் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து, சென்னிமலை பகுதிகளில் உள்ள குவாரிகளில் வட்டாட்சியா் காா்த்திக் தலைமையில், வருவாய் ஆய்வாளா் முத்துலட்சுமி மற்றும் வருவாய்த் துறையினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.