இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: ஒருவா் காயம்

பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்தவா் பலத்த காயமடைந்தாா்.

பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்தவா் பலத்த காயமடைந்தாா்.

திருப்பூா் மாவட்டம், குன்னத்தூா், சுக்காகவுண்டன்புதூரைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் தியாகராஜன் (59). இவா், குன்னத்தூரில் இருந்து பெருந்துறை நோக்கி இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். பெருந்துறை அருகே உள்ள சீனாபுரம் அருகே சென்றபோது, பின்னால் வந்த காா் ஒன்று மோதியது. இதில், பலத்த காயமடைந்த தியாகராஜன் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com