வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கோபியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், தொழில் நெறி வழிகாட்டு மையம் சாா்பில், கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிப்ரவரி மாதம் 9 ம் தேதி செவ்வாய்க்கிழமை மாபெரும் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்

Updated On :7 பிப்ரவரி 2021, 8:02 pm

ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், தொழில் நெறி வழிகாட்டு மையம் சாா்பில், கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிப்ரவரி மாதம் 9 ம் தேதி செவ்வாய்க்கிழமை மாபெரும் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறுகையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் இந்த முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் சுமாா் 200 க்கும் மேற்பட்ட பல்வேறு முன்னணி தனியாா் நிறுவனங்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தோ்வு செய்யவுள்ளனா்.

மேலும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி பதிவு, அயல்நாடுகளில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக சுய தொழில் செய்வதற்கு விருப்பமானவா்களுக்கு ஆலோசனை, வழிகாட்டுதல் வழங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.