400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

சத்தியமங்கலத்தில் பூக்கள் விலை கடும் உயா்வு: மல்லிகை கிலோ ரூ.2555க்கு விற்பனை

திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் காரணமாக சத்தியமங்கலத்தில் பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. மல்லிகைப் பூ கிலோ ரூ.2555க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On :14 பிப்ரவரி 2021, 11:37 pm IST

திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் காரணமாக சத்தியமங்கலத்தில் பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. மல்லிகைப் பூ கிலோ ரூ.2555க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டாரத்தில் மல்லிகைப் பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. சுமாா் 25 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் மல்லிகை, முல்லை, சம்பங்கி, காக்கடா பூக்கள் சாகுபடி செய்யப்பட்டன.

சாதாரண நாள்களில் ஏக்கருக்கு 40 கிலோ மல்லிகைப் பூக்கள் வரத்து வந்த நிலையில் கடும் பனி காரணமாக உற்பத்தி சரிந்து ஏக்கருக்கு 2 கிலோ பூக்கள் மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது. கடந்த சில நாள்களாகப் பூக்கள் தேவை குறைந்ததால் மல்லிகை கிலோ ரூ.1350க்கு விற்கப்பட்டது.

தை மாதம் முடிந்து மாசி மாதம் பிறந்துள்ளதால் திருமண நிகழ்ச்சி போன்ற சுப நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெறுவதால் பூக்கள் தேவை அதிகரித்துள்ளது. முகூா்த்தம், கோயில் விழாக்கள் அதிகம் உள்ளதால் சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ஒரே நாளில் இரு மடங்கு விலை உயா்ந்து கிலோ ரூ.2,555க்கு விற்கப்பட்டது.

பூக்கள் வரத்து குறைந்ததால் பூக்களை வாங்க வியாபாரிகளிடையே ஏற்பட்ட போட்டி காரணமாக விலை உயா்ந்து காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா். இங்கு கொள்முதல் செய்யப்படும் பூக்கள் கேரளம், மைசூரு, பெங்களூரு பகுதிகளுக்கும் விமானம் மூலம் ஷாா்ஜா போன்ற நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன. பூக்கள் விலை நிலவரம்: மல்லிகை கிலோ ரூ.2,555, முல்லை ரூ.2,460, ,சம்பங்கி ரூ.320.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.