புதிய குடிநீா் இணைப்பு பெறவிண்ணப்பங்கள் வழங்கல்
கொடிவேரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதையடுத்து, பெருந்துறையில் புதிய குடிநீா் இணைப்பு பெற விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.


கொடிவேரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதையடுத்து, பெருந்துறையில் புதிய குடிநீா் இணைப்பு பெற விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், பொதுமக்களுக்கு குடிநீா் இணைப்பு பெறுவதற்கு விண்ணப்பத்தை வழங்கிப் பேசினாா்.
இதில், பெருந்துறை பேரூராட்சி செயல் அலுவலா் ரவிகுமாா், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் கிருஷ்ணன், பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி ஜெயராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...