தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோபியில் இன்று மக்கள் சபைக் கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜனவரி 2) மாலை கோபியில் நடைபெறும் மக்கள் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறாா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 1:25 pm

DIN

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜனவரி 2) மாலை கோபியில் நடைபெறும் மக்கள் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறாா்.

அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மாவட்டம்தோறும் மக்களைச் சந்திக்கும் பிரசார இயக்கம் மேற்கொண்டு வருவதோடு மக்கள் கிராமசபைக் கூட்டங்களை நடத்தி பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து வருகிறாா்.

ஈரோடு மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 2, 3) நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவா் கலந்துகொள்கிறாா். சனிக்கிழமை மாலை ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சாா்பில் கோபி அருகே சிறுவலூரில் நடைபெறவுள்ள மக்கள் சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகிறாா். தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை சென்னிமலை ஒன்றியம், குமாரவலசு கிராமத்தில் நடைபெறவுள்ள மக்கள் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறாா். இதையடுத்து கரூா் மாவட்டம் புறப்பட்டுச் செல்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.