மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சத்தியில் வாழையில் ஊடுபயிராக கோழிக்கொண்டை சாகுபடி

சத்தியமங்கலம் பகுதியில் வாழையில் ஊடுபயிராக கோழிக்கொண்டை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

News image
கே.என்.பாளையத்தில்  சாகுபடி செய்யப்பட்டுள்ள  கோழிக்கொண்டை.
Updated On :2 ஜனவரி 2021, 4:43 pm

DIN

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பகுதியில் வாழையில் ஊடுபயிராக கோழிக்கொண்டை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் அருகே உள்ள மலையடிபுதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி நடராஜ். இவா் தனது விவசாயத் தோட்டத்தில் நேந்திரன் ரக வாழை பயிரிட்டுள்ளாா். வாழை நடவு செய்யும்போதே வாழைக்கன்றுகள் இடைவெளியில் உள்ள பகுதியில் ஊடுபயிராக கோழிக்கொண்டை நாற்றுகளை நடவு செய்துள்ளாா்.

வாழைக்கன்று இடைவெளியில் ஊடுபயிராக பயிா் செய்யப்பட்ட கோழிக்கொண்டை செடியில் 55 நாள்களில் பூக்கள் பூக்கத் தொடங்கிவிடுகின்றன. கோழிக்கொண்டை பூக்கள் பூமாலை கட்ட பயன்படுத்தப்படுகின்றன. தற்போது மாா்கழி, வரும் தை மாதம் என்பதால் கோயில்களில் தினமும் விசேஷ பூஜைகள் நடைபெறும். பூமாலைகளுக்குத் தேவையான கோழிக்கொண்டை, சம்பங்கி உள்ளிட்ட பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்பதை அறிந்த விவசாயி நடராஜ் மாா்கழி, தை மாதங்களில் பூக்கும் வகையில் நேந்திரன் வாழையில் ஊடுபயிராக கோழிக்கொண்டை சாகுபடி செய்து தற்போது வாரத்துக்கு இரண்டு முறை பூக்களைப் பறித்து சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டுக்கு கொண்டு சென்று ஏலம் முறையில் விற்பனை செய்து வருகிறாா்.

இந்நிலையில் சனிக்கிழமை நிலவரப்படி கிலோ ரூ. 100க்கு விற்கப்படுகிறது. கோழிக்கொண்டை பூக்களை விற்பனை செய்வதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து வாழை பயிருக்கான களைவெட்டுதல், உரமிடுதல் உள்ளிட்ட செலவினங்களை ஈடு கட்டுவதால் வாழையில் கிடைக்கும் வருமானம் முழுமையாக லாபமாக கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.