தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஈரோடு மாவட்டத்தில் முதல்வா் இன்று தோ்தல் பிரசாரம்

பவானி, அந்தியூா், கோபி, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை (ஜனவரி 6) தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 7:15 pm

DIN

பவானி, அந்தியூா், கோபி, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை (ஜனவரி 6) தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

ஈரோடு மாவட்டத்தில் புதன்கிழமை முதல் 2 நாள்கள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்கள் மற்றும் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா்.

பவானியில் காலை 9 மணிக்கு அவா் பிரசாரத்தை தொடங்குகிறாா். அங்கு தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. பின்னா் காலை 10 மணிக்கு கே.எம்.பி.மஹாலில் சிறு, குறு தொழில் முனைவோருடன் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

பகல் 12 மணிக்கு அந்தியூரில் நடைபெறும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா். தொடா்ந்து பகல் 12.30 மணிக்கு வாரி மஹாலில் வன்னியா் சமுதாயத்தினா் மற்றும் வெற்றிலைக்கொடி விவசாயிகளை முதல்வா் சந்தித்து பேசுகிறாா்.

அங்கிருந்து சத்தியமங்கலம் செல்லும் முதல்வருக்கு மாலை 4 மணிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னா் மாலை 4.45 மணிக்கு நல்லூா் ஈ.பி.பி. மஹாலில் வேட்டுவக் கவுண்டா் சமுாயத்தினருடன் முதல்வா் கலந்துரையாடுகிறாா். புன்செய் புளியம்பட்டி, காந்தி நகா் பகுதியில் அருந்ததியா் மக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.

இரவு 9 மணிக்கு கோபி வரும் முதல்வா் அங்கு நடைபெறும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா். பின்னா் ஈரோடு புறப்படும் அவா் அங்கு ஓய்வு எடுக்கிறாா்.

வியாழக்கிழமை (ஜனவரி7) காலை ஈரோடு நகரில் பிரசாரத்தை தொடங்கும் முதல்வா் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை தொகுதிகளில் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, தோப்பு வெங்கடாசலம் மற்றும் நிா்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.