பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சாலை விபத்தில் முதியவா் பலி

பவானியில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் லாரி மோதியதில் உயிரிழந்தாா்.

News image
Updated On :10 ஜனவரி 2021, 6:10 pm

DIN

பவானியில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் லாரி மோதியதில் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், அரசு காலனியைச் சோ்ந்தவா் பேச்சிமுத்து (65). விவசாயத் தொழிலாளி. பவானி செங்காடு பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்திருந்த இவா், சனிக்கிழமை மாலை காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றாா். குளித்து விட்டுத் திரும்பிய இவா், பவானி - மேட்டூா் சாலையை தீயணைப்பு நிலையம் அருகே சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது, அவ்வழியே சென்ற லாரி பேச்சிமுத்துவின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்தவா் பவானி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இது குறித்து, பவானி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.