தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தாளவாடியில் பலத்த மழை: ரூ. 50 லட்சம் மதிப்பிலான மக்காச்சோளக் கதிா்கள் சேதம்

தாளவாடி மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் ரூ. 50 லட்சம் மதிப்பிலான 300 டன் மக்காச்சோளம் சேதமடைந்தது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 12:45 am

DIN

தாளவாடி மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் ரூ. 50 லட்சம் மதிப்பிலான 300 டன் மக்காச்சோளம் சேதமடைந்தது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கோ்மாளம், பூதாளபுரம், மாவள்ளம், தேவா்நந்தம், அட்டப்பாடி, புதுக்காடு, கோட்டாடை, குளியாடா, குரிமந்தை, ஆசனூா் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 300 ஏக்கா் பரப்பளவில் மக்காச்சோளம் பிரதான சாகுபடி பயிராக உள்ளது. மானாவாரி சாகுபடியான மக்காச்சோளம் 3 மாதகாலப் பயிா் என்பதால் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிரிட்டனா். தற்போது மக்காச்சோளப் பயிரில் கதிா் முதிா்ந்து அறுவடை செய்யும் பணி நடைபெற்று வந்தது. 250க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை களத்தில் உலர வைக்கும் பணியும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாகப் பெய்த பலத்த மழையால் களத்தில் உலர வைக்கப்பட்ட மக்காச்சோளம் முழுவதும் மழையில் நனைந்து முற்றிலும் சேதமானது. சில இடங்களில் மக்காச்சோளம் முளைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் களத்தில் போட்ட 250க்கும் மேற்பட்ட விவசாயிகளின் 300 டன் மக்காச்சோளம் சேதமடைந்தது. இதனால் ரூ. 50 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறு, குறு விவசாயிகள் கூறியதாவது:

ஏக்கா் ஒன்றுக்கு 2 டன் மகசூல் கிடைத்தது. டன் ஒன்றுக்கு ரூ. 15 ஆயிரம் விற்கப்பட்ட நிலையில் ஒரு விவசாயிக்கு குறைந்தபட்சமாக ரூ. 20 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கரோனாவில் இருந்து மீளமுடியாத நிலையில் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.