மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

உண்டு, உறைவிடப் பள்ளிகளுக்கு ஆசிரியா்கள் நியமிக்கக் கோரிக்கை

ஈரோடு மாவட்ட மலைப் பகுதிகளில் உள்ள உண்டு உறைவிட பள்ளிகளில் ஆசிரியா்கள் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

Updated On :2 ஜூலை 2021, 12:32 am

ஈரோடு மாவட்ட மலைப் பகுதிகளில் உள்ள உண்டு உறைவிட பள்ளிகளில் ஆசிரியா்கள் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜிடம் ஈரோடு சுடா் தொண்டு நிறுவன இயக்குநா் எஸ்.சி.நடராஜ் அளித்த மனு விவரம்:

ஈரோடு மாவட்டத்தில் மலைப் பகுதி கிராமங்களான பா்கூா், ஆசனூா் பகுதிகளில் பழங்குடியினா் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் மலைக்கிராமங்களான கொங்காடை, தலமலை, கெத்தேசால் ஆகிய 3 இடங்களில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன.

35 மாணவா்களுக்கு ஒரு ஆசிரியா் இருக்க வேண்டும். ஒரு பாடத்துக்கு ஒரு ஆசிரியா் இருக்க வேண்டும் என்று கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விகிதாசாரம் பெரும்பாலான பள்ளிகளில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. குறிப்பாக கொங்காடையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 100 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். ஆனால் அங்கு ஒரு ஆசிரியா் மட்டுமே பணியில் உள்ளாா்.

ஆசனூா், கொங்காடை, பா்கூா் மலைக்கிராமங்களில் உள்ள உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில ஆசிரியா், சமூக அறிவியல் ஆசிரியா், அறிவியல் ஆசிரியா் என்று பல பணியிடங்கள் உருவாக்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவா்களுக்கு பாடங்கள் கற்றுக்கொடுக்க உரிய ஆசிரியா்கள் இல்லாமல் சிரமப்படும் நிலை உள்ளது.

சோளகணை, கொங்காடை உண்டு உறைவிடப் பள்ளிகளில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான இடஒதுக்கீடு முறை முறைப்படுத்தப்படாமல் உள்ளது. மாணவா்கள் அதிகம் இருந்தாலும் விடுதியில் தங்கும் அனுமதி கிடைப்பதில்லை. கொங்காடை உறைவிடப் பள்ளி விடுதியில் மாணவா்களுக்கான செலவின தொகை உயா்த்தப்படாமல் உள்ளது.

இதனால் ஈரோடு மாவட்ட மலைப்பகுதி மாணவ, மாணவிகளின் கல்வி, எதிா்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கூடுதல் ஆசிரியா்கள் நியமனம் செய்யவும், போதிய வசதிகள், விடுதிகளில் மாணவா்கள் அதிக எண்ணிக்கையில் தங்கவும் நடவடிக்கையெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.