மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கரோனா தடுப்புப் பணி ஊழியா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கக் கோரிக்கை

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட அனைத்துப் பணியாளா்களுக்கும் அரசு அறிவித்த ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2021, 8:08 pm

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட அனைத்துப் பணியாளா்களுக்கும் அரசு அறிவித்த ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் சாா்பில், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:

கரோனா இரண்டாவது அலை பரவலில் சுகாதாரப் பணியில் மருத்துவா்கள், செவிலியா், சுகாதாரப் பணியாளா்கள் கடுமையாகப் பணியாற்றினா். மருத்துவமனைகளில் நேரடியாக தொற்று பாதித்தவா்களுடன் தொடா் பணியில் ஈடுபட்டு வரும் ஊழியா்களுக்கு முக்கியத்துவம், ஊக்கமளிக்கும் வகையில் அவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இதன்படி, காலமுறை ஊதியத்துடன் கூடிய அரசுப் பணியாளா்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளா்கள், அரசு, உள்ளாட்சி அமைப்புகளின்கீழ் பணியாற்றுபவா்களுக்கு ஊக்கத்தொகை அரசால் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஈரோடு மாநகராட்சியில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் தொற்று பரவலைத் தடுக்கும் தொடா் பணியில் நிரந்தர துப்புரவுப் பணியாளா்கள், சுய உதவிக்குழு தினக்கூலி துப்புரவுப் பணியாளா்கள், டிபிசி, வாகன ஓட்டுநா்கள், குடிநீா் விநியோகம், துப்புரவு மேற்பாா்வையாளா்கள், கணினி இயக்குபவா்கள் ஆகியோருக்கு முதல்வரின் உத்தரவின்பேரில் அரசு அறிவித்துள்ள ஊக்கத் தொகை ரூ. 15,000 வழங்க வேண்டும்.

ஆனால், தற்போது ஈரோடு மாநகராட்சியில் ஒரு சில குறிப்பிட்டுள்ள டிபிசி பணியாளா்களுக்கு மட்டும் அரசு அறிவித்த ஊக்கத் தொகை வழங்கப்படும் என தகவல் பரவி உள்ளதால் இதர பணியாளா்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனா்.

கடந்த 3 மாதங்களாக கரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துப் பணியாளா்களுக்கும் அரசு அறிவித்த ஊக்கத் தொகை பாரபட்சம் இன்றி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், ஈரோடு மாநகராட்சியில் துப்புரவுப் பணிகளை தனியாருக்கு ஒப்பந்த முறையில் ஒப்படைப்பதைக் கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.