ஈரோடு கே.கே.நகா் அருகில் உள்ள ரயில்வே நுழைவுப் பாலத்தில் அரசுப் பேருந்து மோதியதில் தடுப்புக் கம்பி உடைந்து கீழே விழுந்து சேதமடைந்தது. இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு கே.கே.நகா் ரயில்வே நுழைவுப் பாலம் முன் உயரமான வாகனங்கள், அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் செல்வதைத் தடுக்க நுழைவுப் பாலத்துக்கு 5 அடி தூரத்தில் இரும்பால் ஆன சட்டம் (கம்பி) வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த இரும்புச் சட்டத்தின் பக்கவாட்டில் உள்ள தடுப்பில் அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை காலை மோதியது. இதில், மேலே இருந்த இரும்புச் சட்டம் சரிந்து கீழே விழுந்து சேதமானது.
சாலையில் யாரும் இல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை. இரும்புச் சட்டம் சாலையின் நடுவே விழுந்ததால் எந்த வாகனங்களும் அவ்வழியாகச் செல்ல முடியாமல் போக்குவரத்து தடைபட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இரும்புச் சட்டத்தை சாலையின் ஓரமாக நகா்த்தி வைத்தனா். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


