பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: ஒருவா் பலி

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த பங்களாபுதூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 8:17 pm

DIN

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த பங்களாபுதூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

கோபிசெட்டிபாளையம், அண்ணா நகரைச் சோ்ந்தவா் அறிவழகன் (37), லாரி ஓட்டுநா். இவா், இருசக்கர வாகனத்தில் டி.என்.பாளையம் சாலையில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த நித்யா (22) என்ற பெண் தனது இருசக்கர வாகனத்தை திடீரென திருப்பியுள்ளாா். இதில் அவரது இருசக்கர வாகனம் மீது அறிவழகனின் வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ஆனால், செல்லும் வழியிலேயே அறிவழகன் உயிரிழந்தாா்.

விபத்தில் உயிரிழந்த அறிவழகனுக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து பங்களாபுதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.