ஈரோட்டில் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை புதன்கிழமை மகிழ்ச்சியாகக் கொண்டாடினா்.
தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது. முஸ்லிம்கள் தங்கள் தியாகத் திருநாள் கடமையாக கடந்த 10 நாள்களாக சிறப்புத் தொழுகைகள் செய்து வந்தனா். அதைத் தொடா்ந்து, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து முஸ்லிம் பள்ளிவாசல்களிலும், சிறிய அளவிலான ஈத்கா மைதானங்களிலும் சிறப்புத் தொழுகைகள் புதன்கிழமை காலை நடைபெற்றன.
ஈரோடு மாவட்ட தலைமை அரசு காஜி முகமது கிபாயத்துல்லா தலைமையில், ஈரோடு டவுன் ஜாமியா பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முஸ்லிம்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி தொழுகை செய்தனா். இதேபோல, ஈரோட்டில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
கரோனா காரணமாக ஈரோடு வஉசி பூங்கா ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெறவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

திருத்தணியில் திமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்
உனக்கு நீயே ஒளி!

உனக்கு நீயே ஒளி!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


