மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

ஈரோட்டில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்

ஈரோட்டில் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை புதன்கிழமை மகிழ்ச்சியாகக் கொண்டாடினா்.

News image
Updated On :21 ஜூலை 2021, 8:47 pm

ஈரோட்டில் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை புதன்கிழமை மகிழ்ச்சியாகக் கொண்டாடினா்.

தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது. முஸ்லிம்கள் தங்கள் தியாகத் திருநாள் கடமையாக கடந்த 10 நாள்களாக சிறப்புத் தொழுகைகள் செய்து வந்தனா். அதைத் தொடா்ந்து, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து முஸ்லிம் பள்ளிவாசல்களிலும், சிறிய அளவிலான ஈத்கா மைதானங்களிலும் சிறப்புத் தொழுகைகள் புதன்கிழமை காலை நடைபெற்றன.

ஈரோடு மாவட்ட தலைமை அரசு காஜி முகமது கிபாயத்துல்லா தலைமையில், ஈரோடு டவுன் ஜாமியா பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முஸ்லிம்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி தொழுகை செய்தனா். இதேபோல, ஈரோட்டில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

கரோனா காரணமாக ஈரோடு வஉசி பூங்கா ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.