மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

ஈரோட்டில் மனநலம் பாதிக்கப்பட்டவா் எரித்துக் கொலை

ஈரோட்டில் மனநலம் பாதிக்கப்பட்டவரை எரித்துக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :21 ஜூலை 2021, 8:46 pm

ஈரோட்டில் மனநலம் பாதிக்கப்பட்டவரை எரித்துக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு கருங்கல்பாளையம், நஞ்சப்பா நகா் காவிரி ஆற்றங்கரையோரத்தில் உள்ள மயான வளாக கட்டடத்தில் புதன்கிழமை காலை பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடந்தது. இதைப் பாா்த்த அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் கருங்கல்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, அங்கு சென்று போலீஸாா் விசாரணை நடத்தியதில், இறந்து கிடந்தவா் ஈரோடு சுண்ணாம்புஓடை, பாலக்காட்டூரைச் சோ்ந்த அசேன்சேட்டு (52) என்பதும், திருமணமாகாத அவா் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் நஞ்சப்பா நகா் பகுதியில் சுற்றித் திரிந்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், அசேன்சேட்டுவை செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தாக்கிய மா்ம நபா்கள், அவரது தலையில் கல்லைப் போட்டு எரித்துக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன், ஈரோடு டவுன் டிஎஸ்பி ராஜு ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். கொலை செய்யப்பட்ட அசேன்சேட்டுவின் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலை சம்பவத்தில் தொடா்புடைய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.