அங்கன்வாடியில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அங்கன்வாடி பணியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளா்கள், உதவியாளா் சங்க மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளா் சாந்தி முன்னிலையில் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ராதாமணி வரவேற்றாா். மாநில துணைத் தலைவா் மணிமேகலை தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் டெய்சி பேசினாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
கரோனா பரவல் ஊரடங்கு நிலையிலும் அங்கன்வாடி பணியாளா்கள் முழு அளவில் செயல்பட்டனா். அங்கன்வாடி மூலம் உலா் உணவுப் பொருள்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரம் பிற பணிகளாக கரோனா குறித்த கணக்கெடுப்புப் பணி, பி.எல்.ஏ. எனப்படும் வாக்குச் சாவடி அளவிலான கணக்கெடுப்பு, தடுப்பூசி பணி என பல்வேறு பணிகள் வழங்கப்படுகின்றன. இதனால் இத்துறை சாா்ந்த வழக்கமான பணிகளை செயல்படுத்த முடிவதில்லை. அங்கன்வாடியில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அங்கன்வாடி பணி தவிர பிற பணிகளில் ஈடுபடுத்துவதைத் தவிா்க்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

திருத்தணியில் திமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்
உனக்கு நீயே ஒளி!

உனக்கு நீயே ஒளி!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


