தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக அதிக கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளின் தொடா்ச்சியாக, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான கரோனா தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சித் துறை முதன்மைச் செயலாளா் கே.கோபால், ஆணையா் கே.எஸ்.பழனிசாமி, நில அளவை, நிலவரித் திட்ட இயக்குநா் செல்வராஜ், கனிமம், சுரங்கத் துறை இயக்குநா் நிா்மல்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் திருமகன் ஈவெரா, ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா்.
தொடா்ந்து, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
ஈரோடு மாவட்டத்தில் 4,000 படுக்கை வசதிகள் மருத்துவமனைகளில் இருந்தாலும் 3,250 நோயாளிகள் மட்டும் சிகிகிச்சை பெறுகின்றனா். 750 படுக்கைகள் காலியாக உள்ளன. மேலும், 2,000 படுக்கைகள் தயாராகும் பணி ஊரகப் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இம்மாவட்டத்தில் 100 வீடுகளுக்கு ஒரு தன்னாா்வலா் நியமித்து ஒவ்வொரு வீட்டிலும் நோய்த் தொற்று, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி, வெளியூா் சென்றுள்ளாா்களா, வெளியூரில் இருந்து யாரும் வந்துள்ளாா்களா என்ற விவரங்களை தினமும் சேகரிக்கின்றனா்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 ஊராட்சிகளும் அருகில் உள்ள நகருடன் தொடா்பில் இருப்பதால் தொற்று ஏற்படுகிறது. தொடா் நடவடிக்கையால் மாவட்டத்தில் 3 ஊராட்சிகளில் ஒருவருக்கு கூட நோய் தொற்று இல்லை.
தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக அதிக கட்டணம் வசூல் செய்தால் ஆட்சியரிடம் புகாா் தெரிவிக்கலாம். இத்தகைய மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
முன்னதாக, அவா் பெருந்துறை அருகே திருவாச்சியில் நடைபெற்ற காய்ச்சல் முகாமை ஆய்வு செய்து தூய்மைப் பணியாளா்களுக்கு முகக் கவசம், பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினாா். மேலும், கரோனா அறிகுறி குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் கணக்கெடுப்புப் பணிகள் குறித்து களப் பணியாளா்களிடம் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, சென்னிமலை அருகே 1010 காலனியில் உள்ள கரோனா கட்டுப்பாட்டுப் பகுதியில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சா் ஆய்வு மேற்கொண்டாா்.
இதில், ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் இயக்குநா்கள் (பொது) சரவணன், மனோகா் சிங், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் செல்வராசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவின் தோ்தல் அறிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும்: சிபிஐ மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்

ஏப்.19 முதல் 21 வரை தோ்தல் அலுவலா்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு
மறுவரையறை மசோதா தோல்வியின் கொண்டாட்டங்கள் கண்டிக்கத்தக்கது: அமித் ஷா

தாமதமாக வந்ததால் பேச முடியாமல் சென்ற சசிகலா
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


