ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காய்கறி வாகனத்தில் மதுபானங்கள்கடத்தல்: ஓட்டுநா் கைது 732 மது பாட்டில்கள் பறிமுதல்

காய்கறி வாகனத்தில் மது பானங்கள் கடத்திய ஓட்டுநரை ஆசனூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :11 ஜூன் 2021, 11:58 pm

காய்கறி வாகனத்தில் மது பானங்கள் கடத்திய ஓட்டுநரை ஆசனூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சத்தியமங்கலம் அருகே தமிழக - கா்நாடக எல்லையில் உள்ள ஆசனூா் காவல் நிலையம் முன்பு சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து காய்கறிகள் பாரம் ஏற்றி வந்த மினி லாரியை போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, காய்கறி மூட்டைகளுக்கு இடையே கா்நாடக மாநில மதுபானங்கள் பெட்டிகளில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காய்கறி வாகனத்தையும், 732 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீஸாா், பெங்களூரு பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் உதயரங்கநாத்தை கைது செய்தனா்.பின்னா், அவரை சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோபி செட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.