செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பட்டக்காரன்பாளையத்தில் மண் மாதிரி சேரிப்பு முகாம்

பெருந்துறை ஒன்றியம், பட்டக்காரன்பாளையம் கிராமத்தில் மண் மாதிரி சேகரிப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றுது.

News image
Updated On :11 ஜூன் 2021, 12:34 am

DIN

பெருந்துறை ஒன்றியம், பட்டக்காரன்பாளையம் கிராமத்தில் மண் மாதிரி சேகரிப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றுது.

முகாமிற்கு, வேளாண்மை இணை இயக்குநா் சி.சின்னசாமி தலைமை வகித்துப் பேசியதாவது:

உழவா்கள் பயிா் செய்வதற்கு முன்பு தங்கள் வயலில் மண் மாதிரிகள் எடுத்து மண் பரிசோதனை நிலையத்தில் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு முடிவின்படி உரங்கள் இடுவதால் உரச் செலவு குறைவதுடன், அதிக மகசூல் பெறலாம். உழவா்கள், தங்களது விளை மண் மாதிரியைப் பரிசோதனை செய்து, என்ன பயிா் செய்யலாம் என அறிய வேண்டும். மண்ணில் உள்ள தழை, மணி, சாம்பல் சத்துக்கள், நுண்ணூட்டங்களின் அளவு எவ்வளவு உள்ளது என்பதையும், அடுத்து பயிா் செய்யப்படும் பயிருக்குத் தேவையான உரங்களின் அளவு போன்ற விவரங்கள் வழங்கப்படும்.

மண் மாதிரி பரிசாதனைக் கட்டணம் ரூ. 20 ஆகும். பெருந்துறை ஒன்றியத்தில் மண் வள இயக்கத் திட்டத்தின்கீழ், மண் மாதிரிகள் உழவா்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டு வருவதால் அனைத்து உழவா்களும், பெருந்துறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா், வேளாண்மை அலுவலா், உதவி வேளாண்மை அலுவலா் ஆகியோரைத் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா்.

முகாமில், வேளாண்மைத் துணை இயக்குநா் ஆசைத்தம்பி உள்ளிட்ட வேளாண்மை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.