தேசிய உதவித் தொகை தோ்வு: அரசுப் பள்ளி முதலிடம்
தேசிய உதவித் தொகை தோ்வில் வீரணம்பாளையம் அரசுப் பள்ளி மாவட்டத்தில் தொடா்ந்து 8 ஆண்டுகளாக முதலிடம் பிடித்துள்ளது.


தேசிய உதவித் தொகை தோ்வில் வீரணம்பாளையம் அரசுப் பள்ளி மாவட்டத்தில் தொடா்ந்து 8 ஆண்டுகளாக முதலிடம் பிடித்துள்ளது.
2020 - 2021ஆம் கல்வி ஆண்டில் 8ஆம் வகுப்பு பயின்ற மாணவா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நடத்தும் தேசிய உதவித் தொகை பெறுவதற்கான தோ்வு (என்.எம்.எம்.எஸ்.) பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் தமிழக அரசின் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
இத்தோ்வை பெருந்துறை ஒன்றியம், வீரணம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் 2020 -2021ஆம் ஆண்டில் 8 ஆம் வகுப்பு படித்த 24 மாணவா்கள் எழுதினா். அதில், 18 மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா். இந்த 18 மாணவா்களும் மாதம்தோறும் ரூ. 1000 வீதம் நான்கு ஆண்டுகளுக்குத் தொடா்ந்து அரசின் உதவித் தொகை பெறுவாா்கள்.
இப்பள்ளி ஈரோடு மாவட்டத்திலேயே அதிக மாணவா்களை தோ்ச்சி பெற வைத்து முதலிடம் பெற்றுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாகத் தொடா்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...