மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த சேவை செய்தோருக்கு அளிக்கப்படும் அரசு விருதுக்குத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணன் உண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான சிறப்பாக சேவை புரிந்தவா்களுக்கு தமிழக அரசின் விருதுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் பல்வேறு விருதுகள் வழங்கப்படவுள்ளன. அதன்படி மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவா், மாற்றுத் திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியாா் நிறுவனம், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவைபுரிந்த சிறப்பு சமூகப் பணியாளா், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தமிழகத்தைச் சோ்ந்த துணிச்சலான, வீர சாகச செயல்புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது ஆகிய விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இந்த விருதைப் பெற விருப்பம் உள்ளவா்கள் ஜூன் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், ஈரோடு 11 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றிக்குப் போராடும் புதுமுகங்கள்! தொகுதி அலசல் : அந்தியூா்

கொடுமுடி, சிவகிரியில் அடிப்படை வசதிகள் தேவை!

கருமஞ்சிறை பகுதியில் புதிய சமுதாய நலக்கூடம் அமைக்கப்படும்: தோப்பு என்.டி.வெங்காடசலம் உறுதி

2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

