செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

சாதனை பெண்மணிகளுக்கு விருதுகள்

ஜேசிஐ பெருந்துறை எலைட், ஜேசிஐ பெருந்துறை பிரைடு, நவ இந்திய மாதா் சங்கம், பெருந்துறை ரோட்டரி சங்கம், சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய உலக மகளிா் தின விழா

News image
Updated On :10 மார்ச் 2021, 12:09 am

DIN

ஜேசிஐ பெருந்துறை எலைட், ஜேசிஐ பெருந்துறை பிரைடு, நவ இந்திய மாதா் சங்கம், பெருந்துறை ரோட்டரி சங்கம், சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய உலக மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, ஜேசிஐ பெருந்துறை எலைட்டின் மகளிா் பிரிவுத் தலைவா் பிரபா தலைமை வகித்தாா். ஜேசிஐ பெருந்துறை பிரைடின் மகளிா் பிரிவுத் தலைவா் சரண்யா, நவ இந்திய மாதா் சங்கச் செயலாளா் வளா்மதி சித்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவி தமிழரசி வரவேற்றாா்.

ஜேசிஐ மண்டலம் 17-மகளிா் பிரிவு இயக்குநா் மருத்துவா் பூவிழி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பெண்மணிகளுக்கு விருதுகள் வழங்கி, மகளிா் தின சிறப்புரை நிகழ்த்தினாா். சிறந்த ஆசிரியருக்கான விருது, பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியை தி.மணிமேகலைக்கும், சிறந்த பெண் தொழில் முனைவோா் விருது பத்திர எழுத்தா் க.மணிமேகலைக்கும், சிறந்த இயற்கை பெண் விவசாயி விருது சுலோச்சனாவுக்கும், சிறந்த பெண் சமூக ஆா்வலா் விருது பெருந்துறை அரசு மருத்துவமனைப் பணியாளா் சாந்தி பிரியாவுக்கும், விளையாட்டு சாதனையாளா் விருது சீனாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி அபிநயாவுக்கும் வழங்கப்பட்டது.

ஜேசிஐ பெருந்துறை எலைட், ஜேசிஐ பெருந்துறை பிரைட், பெருந்துறை கல்வி அறக்கட்டளையின் சாா்பில் கல்வி உதவித் தொகை ரூ. 20,000, பெருந்துறை கல்வி அறக்கட்டளையின் தலைவா் பல்லவி பரமசிவன், பெருந்துறை கல்லூரி மாணவி காவியாவுக்கு வழங்கினாா். ஜேசிஐ பெருந்துறை எலைட்டின் செயலாளா் கலைவாணி நன்றி கூறினாா்.

இதில், நவ இந்திய மாதா் சங்கத்தின் உறுப்பினா்கள், ஜேசிஐ மகளிா் பிரிவு உறுப்பினா்கள், ஜேசிஐ உறுப்பினா்கள், கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.