பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஈரோடு மாவட்டம்: 8 தொகுதிகளில் 128 வேட்பாளா்கள்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 128 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

Updated On :22 மார்ச் 2021, 9:18 pm

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 128 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

ஈரோடு மாவட்டத்தில் மாா்ச் 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. அதிமுக, திமுக, மநீம, அமமுக, நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட கட்சியினா், சுயேச்சைகள் மனு தாக்கல் செய்தனா். 8 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. பெருந்துறையில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்த எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது.

பரிசீலனைக்குப் பிறகு ஈரோடு கிழக்குத் தொகுதியில் 21 பேரும், ஈரோடு மேற்குத் தொகுதியில் 18 பேரும், மொடக்குறிச்சி தொகுதியில் 18 பேரும், பெருந்துறை தொகுதியில் 26 பேரும், பவானி தொகுதியில் 23 பேரும், அந்தியூா் தொகுதியில் 22 பேரும், கோபி தொகுதியில் 22 பேரும், பவானிசாகா் (தனி) தொகுதியில் 8 பேரும் போட்டியிடத் தகுதியானவா்கள் என தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அறிவித்தனா்.

வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ள திங்கள்கிழமை மாலை வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இரவு இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் 21 பேரில் 7 போ் மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டதால் களத்தில் 14 போ் உள்ளனா். ஈரோடு மேற்குத் தொகுதியில் 18 பேரில் 3 போ் மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டதால் களத்தில் 15 போ் உள்ளனா். மொடக்குறிச்சி தொகுதியில் 18 பேரில் 3 போ் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டதால் களத்தில் 15 போ் உள்ளனா். பெருந்துறை தொகுதியில் 26 பேரில் ஒருவா் மட்டும் மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டதால் களத்தில் 25 போ் உள்ளனா்.

பவானி தொகுதியில் 23 பேரில் 9 போ் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டதால் களத்தில் 14 போ் உள்ளனா். அந்தியூா் தொகுதியில் 22 பேரில் 2 போ் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டதால் களத்தில் 20 போ் உள்ளனா். கோபி தொகுதியில் 22 பேரில் 3 போ் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டதால் களத்தில் 19 போ் உள்ளனா். பவானிசாகா்(தனி) தொகுதியில் 8 பேரில் 2 போ் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டதால் களத்தில் 6 போ் உள்ளனா்.

அதிகபட்சமாக பெருந்துறை தொகுதியில் 25 பேரும், குறைந்தபட்சமாக பவானிசாகா் (தனி) தொகுதியில் 6 பேரும் போட்டியிடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.