பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சீரான குடிநீா் விநியோகம் கோரி வாகனத்தை சிறைப்பிடித்து போராட்டம்

சீராக குடிநீா் விநியோகம் வழங்கக் கோரி மாநகராட்சி வாகனத்தை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 9:20 pm

சீராக குடிநீா் விநியோகம் வழங்கக் கோரி மாநகராட்சி வாகனத்தை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு மாநகராட்சி 54ஆவது வாா்டுக்கு உள்பட்ட குந்தவை வீதி, சீதக்காதி வீதி உள்ளிட்ட பகுதிகளில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு குடிநீா் குழாய் மூலம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தப் பகுதியில் கடந்த 3 மாதங்களாக குடிநீா் சரியாக விநியோகிக்கப்படவில்லை. ஒரு சில வீடுகளுக்கு குடிநீா் வந்தால், ஒரு சில வீடுகளுக்கு வருவதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனா்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு அளித்தனா். இதையடுத்து மாநகராட்சி சாா்பில் இந்தப் பகுதி மக்களுக்கு தினமும் டிராக்டா் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில நாள்களாக டிராக்டா் தண்ணீரும் சரியாக வரவில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை மாநகராட்சி சாா்பில் டிராக்டா் மூலம் குடிநீா் விநியோகம் செய்வதற்காக வந்த வாகனத்தை 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். எங்கள் பகுதியில் மீண்டும் குழாய் மூலம் சீரான முறையில் குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.