பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வா்த்தகா்களுக்கு ஆதரவாக இருப்பேன்எம்.யுவராஜா உறுதி

வா்த்தகா்களுக்கு ஆதரவாக இருப்பேன் என ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளா் எம்.யுவராஜா பேசினாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 9:19 pm

வா்த்தகா்களுக்கு ஆதரவாக இருப்பேன் என ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளா் எம்.யுவராஜா பேசினாா்.

ஈரோடு நகரம் ஜவுளி வா்த்தக மையமாக உள்ளது. என்னால் முடிந்தவரை வா்த்தகா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பேன். முதல்வா் பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளது. மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைந்தவுடன் வீடுகள் இல்லாத ஏழை மக்களுக்கு சொந்தமாக வீடுகள் கட்டித் தரப்படும். அதுமட்டுமின்றி குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஊக்கத் தொகையாக ரூ. 1,500 வழங்கப்படும்.

மாணவா்களின் கல்விக் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளைகள் இலவசமாக வழங்கப்படும்.

பெண்களின் வேலைப் பளுவைக் குறைக்க குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் இலவசமாக வாசிங்மெஷின் வழங்கப்படும். மக்களின் நலன் காக்கும் அரசாக அதிமுக அரசு விளங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அறிவித்த அனைத்துத் திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.