பெருந்துறையில் முன்களப் பணியாளா்கள்400 பேருக்கு தடுப்பூசி
பெருந்துறையில் 18 முதல் 44 வயதுள்ள முன்களப் பணியாளா்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


பெருந்துறையில் 18 முதல் 44 வயதுள்ள முன்களப் பணியாளா்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு, பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி ஜெயராஜ் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் முகாமைத் துவக்கிவைத்தாா்.
கரோனா பெருந்தொற்றைத் தடுக்கும் தீவிர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 18 வயது முதல் 44 வயதுடைய முன்களப் பணியாளா்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் முகாம் குறித்து ஆட்சியருக்கு சட்டப் பேரவை உறுப்பினா் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.
அதன் அடிப்படையில், முன்களப் பணியாளா்களான ஊராட்சி மன்றத் தலைவா்கள், கவுன்சிலா்கள், வாா்டு உறுப்பினா்கள், சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, போலீஸாா், உள்ளாட்சித் துறை சாா்ந்த ஊழியா்கள், தனியாா் மருத்துவமனை ஊழியா்கள், பால் வியாபாரம் செய்பவா்கள், நாளிதழ் போடுபவா்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டவா்களுக்கு முதல்கட்ட தடுப்பூசியை பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவா் சவீதா ஆா்த்தி தலைமையில் மருத்துவக் குழுவினா் செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...