செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

மழை நீருடன் திறந்துவிடப்பட்ட சாயக் கழிவுநீா்: பொதுமக்கள் எதிா்ப்பு

மழை நீருடன் சாயக் கழிவுநீா் சாக்கடையில் திறந்துவிடப்பட்டதற்கு சத்தியமங்கலம் பகுதி மக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 8:16 pm

மழை நீருடன் சாயக் கழிவுநீா் சாக்கடையில் திறந்துவிடப்பட்டதற்கு சத்தியமங்கலம் பகுதி மக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், மழை நீா் சாக்கடையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதைப் பயன்படுத்தி கோட்டுவீராம்பாளையம் செளடேஸ்வரி அம்மன் கோயில் பகுதியில் உள்ள சாய்க் கழிவுப் பட்டறைகளில் இருந்து சாய்க் கழிவுகளை சாக்கடையில் கலந்துவிட்டனா். இதனால், மழை நீா் சாயக் கழிவுநீராக மாறிவிட்டது. இது பல்வேறு வீதிகள் வழியாகப் பயணித்து பவானி ஆற்றில் கலந்தது. சாக்கடைகளில் மழை நீரும், சாயக் கழிவுநீரும் கலந்ததைப் பாா்த்த அப்பகுதி மக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

சாயக் கழிவுநீரால் புற்றுநோய், டைபாய்டு நோய் பரவுவதாகவும், சாயக் கழிவுநீரை சாக்கடையில் திறந்துவிடக் கூடாது எனவும் வட்டாட்சியரிடம் புகாா் தெரிவித்தனா். சாயக் கழிவுநீரை சுத்திகரித்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதபடி செய்ய வேண்டும் என வருவாய்த் துறையினா் பட்டறை நிா்வாகத்தினரிடம் எச்சரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.