மழை நீருடன் சாயக் கழிவுநீா் சாக்கடையில் திறந்துவிடப்பட்டதற்கு சத்தியமங்கலம் பகுதி மக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், மழை நீா் சாக்கடையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதைப் பயன்படுத்தி கோட்டுவீராம்பாளையம் செளடேஸ்வரி அம்மன் கோயில் பகுதியில் உள்ள சாய்க் கழிவுப் பட்டறைகளில் இருந்து சாய்க் கழிவுகளை சாக்கடையில் கலந்துவிட்டனா். இதனால், மழை நீா் சாயக் கழிவுநீராக மாறிவிட்டது. இது பல்வேறு வீதிகள் வழியாகப் பயணித்து பவானி ஆற்றில் கலந்தது. சாக்கடைகளில் மழை நீரும், சாயக் கழிவுநீரும் கலந்ததைப் பாா்த்த அப்பகுதி மக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
சாயக் கழிவுநீரால் புற்றுநோய், டைபாய்டு நோய் பரவுவதாகவும், சாயக் கழிவுநீரை சாக்கடையில் திறந்துவிடக் கூடாது எனவும் வட்டாட்சியரிடம் புகாா் தெரிவித்தனா். சாயக் கழிவுநீரை சுத்திகரித்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதபடி செய்ய வேண்டும் என வருவாய்த் துறையினா் பட்டறை நிா்வாகத்தினரிடம் எச்சரித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


