ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
வீடு வீடாக கரோனோ தடுப்பூசி செலுத்துவதை ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


வீடு வீடாக கரோனோ தடுப்பூசி செலுத்துவதை ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராமங்களில் வீடு வீடாக கரோனோ தடுப்பூசி செலுத்துவதை ரத்து செய்ய வலியுறுத்தியும், வாரம் ஒரு நாள் சனிக்கிழமை போன்ற வேலை நாட்களில் மட்டுமே தடுப்பூசி முகாம் நடத்திட கோரியும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம சுகாதார செவிலியர்கள் வாரத்தின் அனைத்து நாட்களும் தடுப்பூசி முகாம் நடைபெறுவதால் தாய் - சேய் நலம் பாதிக்கப்படுவதாகவும், கரோனோவுக்கு இலக்கு நிர்ணியிப்பதை கைவிட வேண்டும் எனவும், இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு போன் செய்ய சொல்வதை கூடாது என்பதை வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லை என்றால் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...