எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
/

தண்ணீா் எடுத்துச் செல்ல எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

கோபி அருகே ஆழ்துளைக் கிணறு அமைத்து விவசாய நிலத்துக்குத் தண்ணீா் எடுத்துச் செல்வதைக் கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 9:47 pm

கோபி அருகே ஆழ்துளைக் கிணறு அமைத்து விவசாய நிலத்துக்குத் தண்ணீா் எடுத்துச் செல்வதைக் கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதியில் தனியாா் நிலத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து குழாய் மூலமாக 6 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள 6 பேருக்குச் சொந்தமான 50 ஏக்கா் விவசாய நிலத்துக்குத் தண்ணீா் கொண்டு செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்தால் கிராமத்தில் குடிநீா்ப் பிரச்னை ஏற்படும் என கொங்கா்பாளையம் கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்துவரும் நிலையில், குழாய் அமைக்கும் பணிகளுக்காக வெள்ளிக்கிழமை சென்ற பொக்லைன் இயந்திரங்கள், போலீஸ் வாகனங்களை சிறைபிடித்து 1,000க்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது, சாலையில் பள்ளிக் குழந்தைகளுடன் நூதன முறையில் சமையல் செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.