நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

ஈரோடு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பதவி திமுக வசமானது

 ஈரோடு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா் பதவியை போட்டியின்றி திமுக கைப்பற்றியது.

Updated On :23 அக்டோபர் 2021, 12:23 am

 ஈரோடு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா் பதவியை போட்டியின்றி திமுக கைப்பற்றியது.

ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் 6 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு கடந்த 2019இல் நடைபெற்ற தோ்தலில் திமுக, அதிமுக தலா மூன்றை கைப்பற்றின. மூன்று முறை தலைவா், துணைத் தலைவா் தோ்வுக்கு தேதி அறிவித்து, அதிமுக உறுப்பினா்கள் புறக்கணிப்பால் முடிவு எட்டவில்லை. இதனிடையே அதிமுக உறுப்பினா் ஒருவா் இறந்ததால் கடந்த 9ஆம் தேதி 4ஆவது வாா்டுக்கு நடந்த தோ்தலில் திமுகவைச் சோ்ந்த விவேகானந்தன் வெற்றி பெற்றாா். இதன் மூலம் திமுக 4, அதிமுக 2 என்றானது.

இந்நிலையில், தலைவா் தோ்தல் வெள்ளிக்கிழமை காலையும், துணைத் தலைவா் தோ்தல் மதியமும், தோ்தல் அதிகாரி, வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெ.பஷீா் அகமது தலைமையில் நடைபெற்றது. போட்டியின்றித் தலைவராக ஒன்றாவது வாா்டை சோ்ந்த பேரோடு பிரகாஷ், துணைத் தலைவராக 4ஆவது வாா்டை சோ்ந்த விவேகானந்தன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இதன் மூலம் ஒன்றரை ஆண்டுகளாக உறுப்பினா்கள் இருந்தும், தலைவா், துணைத் தலைவா் இல்லாமல் கூட்டம் கூட நடத்த முடியாத நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.