இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

காவிக்கொடியை கருப்புக்கொடி வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி, காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image

திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின்.

Updated On :18 ஏப்ரல் 2026, 1:23 pm

நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி, காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக, கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்ட அவர், பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு அடித்தளம் அமைத்த திருப்பூருக்கு மகிழ்ச்சியுடன் வந்துள்ளேன். என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா என்கிற சூப்பர் ஸ்டாலின் பாடல்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. என்கிட்ட மோதாதே... இது பெரியாரின் தமிழ்நாடடா வம்புக்கு இழுக்காதே... இது அண்ணாவின் கோட்டையடா. இதைத்தான் தமிழ்நாடே தற்போது பாடுகிறது. நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது.

போர் என்றால் வெற்றி ஒன்றுதான் குறி. நம் குறி தவறவில்லை. இதுதான் திமுக, தமிழ்நாடு, திராவிட மாடல். தொகுதி மறுவரையறை பேராபத்தை 2023லே உணர்ந்து நாட்டிலேயே முதன்முதலாக எதிர்க்கத் தொடங்கியது நாம்தான். இதனால் பாதிக்கப்படக்கூடிய மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்களை அழைத்து சென்னையில் கூட்டம் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றினோம். சட்டப்பேரவையிலும் தீர்மானம் போட்டோம். அப்போது சட்டப்பேரவையில் ஒன்று பேசியது அதிமுக, வெளியே போய் நாம் நாடகமாடுவதாக பேசியது. மசோதா வந்ததும் கருப்புக்கொடி போராட்டம் நாம் நடத்தினோம்.

சட்ட மசோதா நகலை எரித்தோம். நாமக்கல்லில் பற்றவைத்த தீ நாடு முழுவதும் பரவியது. அதன் வெப்பம் நேற்று நாடாளுமன்றத்தில் அந்த சதித் திட்டத்தை எரித்து சாம்பலாக்கியது. தமிழ்நாட்டின் உரிமை பிரச்னையில், மத்திய அரசு சிறப்பாக செய்யும் என பழனிசாமி கூறினார். அமித் ஷாவே சொல்லிவிட்டார் என்று சொன்னார்கள். அதிமுக போன்ற நாணயமற்ற கட்சியை யாரும் பார்த்ததில்லை. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்கிறது அதிமுக. அடிமைகளிடம் மறுபடியும் தமிழ்நாடு சிக்கலாமா? சிக்கினால் தமிழ்நாடு தமிழ்நாடாக இருக்காது. தமிழ்நாட்டை அடிமை அதிமுகவிடம் இருந்தும், மதவாத பாஜகவிடம் இருந்தும் நாம் பாதுகாக்க வேண்டும்.

அதற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

Summary

CM Stalin has stated that the black flag we flew has defeated the saffron flag.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.