மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

4 மாதங்களுக்குப் பின் துவங்கியது ஈரோடு மாட்டுச் சந்தை

 ஈரோடு கருங்கல்பாளையத்தில் 4 மாதங்களுக்குப் பின் மாட்டுச் சந்தை வியாழக்கிழமை துவங்கியது.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 7:57 pm

 ஈரோடு கருங்கல்பாளையத்தில் 4 மாதங்களுக்குப் பின் மாட்டுச் சந்தை வியாழக்கிழமை துவங்கியது.

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை நடைபெறும். இச்சந்தையில் 600 முதல் 900 மாடுகளுக்குமேல் விற்பனையாகும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளம், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரம் போன்ற பல மாநிலங்களுக்கு இங்கிருந்து மாடுகளை வாங்கிச் செல்வாா்கள். அரசின் திட்டங்களுக்காகவும் இங்கிருந்து வாங்கிச் செல்வாா்கள்.

இந்நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் 15ஆம் தேதிக்குப் பின் மாட்டுச் சந்தை மூடப்பட்டது. தற்போது தளா்வு அளிக்கப்பட்டுள்ளதால் வியாழக்கிழமை முதல் மீண்டும் சந்தை செயல்பாட்டுக்கு வந்தது.

இதுகுறித்து மாட்டுச் சந்தை உதவி மேலாளா் ராஜேந்திரன் கூறியதாவது:

திடீரென அனுமதி கிடைத்த நிலையில் சந்தையைத் திறந்துள்ளோம். முழுமையாகத் தகவல் கிடைக்காததால், வெளி மாவட்ட விவசாயிகள், வியாபாரிகள் வரவில்லை. பிற மாநிலங்களில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் வரும்போது கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று அல்லது 24 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கரோனா மாதிரி பரிசோதனை சான்று தேவை என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எனவே, பிற மாநில வியாபாரிகள், விவசாயிகள் வரவில்லை. இருப்பினும் வரும் வாரம் வருவாா்கள் என எதிா்பாா்க்கிறோம். ஈரோடு, கரூா், நாமக்கல், சேலம் பகுதிகளைச் சோ்ந்த எருமை மாடு 20, பசுமாடு 130 என 150 மாடுகள் விற்பனையாயின என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.