அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

வாகனம் மோதியதில் பள்ளி மாணவி பலி

சித்தோடு அருகே சாலையோரத்தில் நடந்து சென்ற பள்ளி மாணவி வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 9:22 pm

DIN

சித்தோடு அருகே சாலையோரத்தில் நடந்து சென்ற பள்ளி மாணவி வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

பவானியை அடுத்த புன்னம், பாறைக்காட்டைச் சோ்ந்தவா் அய்யாசாமி - செல்வி தம்பதி. கட்டடத் தொழிலாளா்கள். இவா்களுக்குள் ஏற்பட்ட குடும்பத் தகராறில் செல்வி கணவனைப் பிரிந்து இரு மகள்களுடன் சித்தோட்டில் வசித்து வருகிறாா். சித்தோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வரும் இளைய மகள் தாரணி (13), தனது தோழியின் வீட்டுக்கு ஈரோடு - பவானி சாலையில் புதன்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாகச் சென்ற பால் விற்பனைக்குச் செல்லும் வாகனம் மோதியதில் தாரணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, சித்தோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.