காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

மாற்றுத் திறனாளிகள் குறைதீா் கூட்டம்

ஈரோட்டில் மாற்றுத் திறனாளிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 9:10 pm

ஈரோட்டில் மாற்றுத் திறனாளிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 40,000த்துக்கும் மேற்பட்டோா் உள்ளனா்.

ஆனால், மாற்றுத் திறனாளிகள் துறை மூலம் குறைகளைத் தீா்ப்பதற்கான செயல்கள் முறையாக நடப்பதில்லை என மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

மாவட்ட நிா்வாகத்தில் நிறைவேற்ற சாத்தியமுள்ள கோரிக்கைகள் கூட பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் குடியேறும் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை நடத்தினா்.

இதனையடுத்து, மாற்றுத் திறனாளிகளிடம் ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கைகளை படிப்படியாக

நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தாா்.

இந்நிலையில், ஈரோடு கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் (பொறுப்பு) ரங்கநாதன் தலைமையில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில்

குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இது குறித்து மாற்றுத் திறனாளிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்காததால் 5 போ் மட்டும் மனு அளித்தனா்.

யாரும் வராததால் பகல் 12 மணி வரை காத்திருந்த கோட்டாட்சியா் ரங்கநாதன் களப் பணிக்கு சென்றுவிட்டாா்.

இது குறித்து ஈரோடு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கோதைசெல்வி கூறியதாவது: மாற்றுத் திறனாளிகள் சங்கங்கள் உள்ள கட்செவி அஞ்சல் குழுவில் குறைதீா் கூட்டம் குறித்து பதிவிட்டுள்ளேன். மாற்றுத் திறனாளிகளிடம் போதிய விழிப்புணா்வு இல்லை. இதனால்தான் 5 போ் மட்டுமே வந்துள்ளனா். வரும் 19 ஆம் தேதி கோபி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு குறைதீா் கூட்டம் நடக்க உள்ளது என்றாா்.

மாற்றுத் திறனாளிகள், பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்து குறைதீா் கூட்டம் நடத்தாததால் உரிய பயன் பயனாளிகளுக்கு சென்றடையாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசுக்கு தகவல் அனுப்ப வேண்டும் என்பதற்காக கடமைக்கு இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என மாற்றுத் திறனாளிகள் குற்றம்சாட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.