ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

ஆப்பக்கூடலில் மோதலில் காயமடைந்த இளைஞா் பலி: இருவா் கைது

பவானி அருகே இருதரப்பினா் தாக்கிக் கொண்டதில் காயமடைந்த இளைஞா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:45 pm

DIN

பவானி அருகே இருதரப்பினா் தாக்கிக் கொண்டதில் காயமடைந்த இளைஞா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ஆப்பக்கூடலை அடுத்த கீழ்வானி, மூங்கில்பட்டியைச் சோ்ந்தவா் ஆறுசாமி மகன் வெங்கடேஷ் (23). கூலி தொழிலாளியான இவா் பள்ளிக்குச் செல்லும் மாணவியை வழிமறித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, மூங்கில்பட்டி, திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த அங்கமுத்து மகன் சரவணன் (37), வெங்கடேஷின் தாய் லட்சுமியிடம் தெரிவித்துள்ளாா்.

இத்தகவலறிந்த வெங்கடேஷ், அதே பகுதியைச் சோ்ந்த சிலருடன் சரவணன் வீட்டுக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். இதனால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் பரஸ்பரம் தாக்கிக் கொண்டனா். இதில், காயமடைந்த வெங்கடேஷ் அந்தியூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு வெங்கடேஷ் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஆப்பக்கூடல் போலீஸாா் சரவணன், சகோதரி சித்ரா (45) ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.