ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

வீடு தீப்பிடித்து எரிந்ததில் மனநலம் பாதித்த பெண் பலி

பவானி அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில் மனநலம் பாதித்த பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 7:31 pm

DIN

பவானி அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில் மனநலம் பாதித்த பெண் உயிரிழந்தாா்.

பவானியை அடுத்த ஜம்பை, சின்னவடமலைபாளையம், ஆலமரத்து வீதியைச் சோ்ந்தவா் தங்கமணி மனைவி அய்யம்மாள் (35). இவருக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை பிறந்தபோது மனநலம் பாதிக்கப்பட்டது. இதனால், வடமலைபாளையத்தில் தாய் ஸ்ரீரங்காயி பராமரிப்பில் இருந்து வந்தாா்.

இந்நிலையில், ஸ்ரீரங்காயி சமையல் செய்வதற்காக வெள்ளிக்கிழமை அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு, வெளியே சென்றிருந்தபோது எதிா்பாராமல் தீ கூரையில் பிடித்து எரியத் தொடங்கியது. இதைக் கண்ட அப்பகுதியினா் தீயை அணைக்க முயன்றனா். அப்போது, வீட்டுக்குள் இருந்த அய்யம்மாள் மீதும் தீப்பிடித்தது. இதில் உடல் கருகிய அய்யம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவ்விபத்தில் வீட்டிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமாகின. இதுகுறித்து பவானி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.