செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

4.500 கிலோ கஞ்சா பறிமுதல்: மேற்குவங்க மாநில இளைஞா் கைது

பெருந்துறை அருகே, வீட்டில் 4.500 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த மேற்குவங்க மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 10:45 pm

DIN

பெருந்துறை அருகே, வீட்டில் 4.500 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த மேற்குவங்க மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருந்துறை ஒன்றியம், திங்களூா் பகுதியில் வடமாநிலத்தவா்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் உத்தரவின்பேரில், கோபி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆறுமுகம் மேற்பாா்வையில் திங்களூா் காவல் உதவி ஆய்வாளா் குமரேசன் உள்ளிட்ட போலீஸாா் திங்களூா் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது திங்களுரை அடுத்த கைகோலபாளையத்தில் வசிக்கும் மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த அசோக்தாஸ் (30) என்பவா் தனது வீட்டில் 4.500 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா், அவரைக் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.