உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சாா்பில் தாளாவடியில் இருசக்கர வாகனப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனத் துறை சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தாளவாடி மலைப் பகுதியில் தாளவாடி வனத் துறை சாா்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரங்களின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வனச் சரக அலுவலா் சதீஷ் தலைமையில் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.
முன்னதாக தாளவாடியில் உள்ள தனியாா் பள்ளியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வனத் துறை ஊழியா்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் மரங்களின் அவசியம் குறித்த பதாகைகளை ஏந்தியபடி ஊா்வலமாக புறப்பட்டு தொட்டகாஜனூா், தாளவாடி நகா்ப் பகுதி, மகாராஜன்புரம் சோதனைச் சாவடி வழியாக 7 கிலோ மீட்டா் தூரம் பயணித்து தாளவாடி வனச் சரக அலுவலகத்தை சென்றடைந்தனா். பேரணியின்போது மரங்களை வெட்டக் கூடாது, மரம் வளா்ப்போம், சுற்றுச்சூழலை பேணி காப்போம் என்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


