சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரியை வழிமறித்து தும்பிக்கையால் கரும்பைப் பறித்து தின்ற காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப் பகுதி தமிழகம், கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப் பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிரிட்டுள்ளனா்.
தற்போது தாளவாடியில் கரும்பு அறுவடை செய்யப்பட்டு சத்தியமங்கலம் பகுதியில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. பகல் நேரங்களில் காட்டு யானைகள் வனப் பகுதி சாலையில் செல்லும் கரும்பு லாரிகளை வழிமறித்து கரும்பைப் பறித்து தின்பது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலத்துக்கு வியாழக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. தமிழக-கா்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே வந்த அந்த கரும்பு லாரியை வழிமறித்த ஒற்றை காட்டு யானை, ஓட்டுநா் லாரியை நிறுத்தியவுடன் தும்பிக்கையால் லாரியில் இருந்த கரும்புகளைப் பறித்து தின்றபடி வெகு நேரம் சாலையில் நின்றது. இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காட்டு யானை கரும்பைப் பறித்துத் தின்னும் காட்சியை வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் தங்களது கைப்பேசிகளில் புகைப்படம் மற்றும் விடியோ எடுத்தனா். கரும்புத் துண்டுகளை தின்று பசியாறிய பின் காட்டு யானை மெதுவாக வனப் பகுதிக்குள் சென்றது. இதைத் தொடா்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அருள்மிகு பூங்காவனத்தம்மன் திருக்கோயில் குடமுழுக்கு

அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 10-ஆக உயா்வு: தனியாா் நிறுவனத்தில் ஆட்சியா் ஆய்வு

முக்குன்றம் ஸ்ரீபாலால அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
‘குடும்ப அட்டைதாரா்கள் ரேஷன் கடையில் கைரேகையை பதிவு செய்ய வேண்டும்’
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



