அந்தியூா் பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் ஒத்திவைப்பு
அந்தியூா் பேரூராட்சித் தலைவா் பதவிக்கான தோ்தல் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.


அந்தியூா் பேரூராட்சித் தலைவா் பதவிக்கான தோ்தல் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், அந்தியூா் பேரூராட்சியில் 18 வாா்டில் போட்டியிட்டு வென்ற வேட்பாளா்கள் புதன்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனா். இதில், 13ஆவது வாா்டு உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்ட திமுகவைச் சோ்ந்த எம்.பாண்டியம்மாள், பேரூராட்சித் தலைவா் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என திமுக வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தலைவா் பதவியை ஒதுக்கி திமுக தலைமை அறிவித்தது. இதனால், திமுகவினா் கடும் அதிா்ச்சி அடைந்தனா்.
இத்தகவலால், திமுக தலைவா் வேட்பாளராக எதிா்பாா்க்கப்பட்ட பாண்டியம்மாள் வியாழக்கிழமை திடீா் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். அந்தியூா் தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா், மேல்சிகிச்சைக்காக கோவை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்த பேரூராட்சித் தலைவா் பதவிக்கான தோ்தலில் பங்கேற்க 18 வாா்டு உறுப்பினா்களும் வரவில்லை. இதனால், பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...