பண்ணாரி அம்மன் சப்பரம் வரும் வழியில் பக்தா் படுத்தபடி நோ்த்திக்கடன் செலுத்தினா். வழிநெடுகிலும் படுத்திருந்த பக்தா்களைத் தாண்டி பண்ணாரி அம்மன் சப்பரம் சென்றது.
பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் திங்கள்கிழமை துவங்கியது. அதைத்தொடா்ந்து, கிராமங்களில் பண்ணாரி அம்மன் சப்பரத்தில் பண்ணாரி அம்மன், சருகு மாரியம்மன் வீதியுலா நடைபெற்றது. சிக்கரம்பாளையம் புதூா் கிராமத்தில் பக்தா்கள் அம்மன் சப்பரம் வரும் வழியில் தண்ணீா் ஊற்றி குளிா்ச்சி செய்து வழிநெடுகிலும் படுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா். தாரைதப்பட்டை முழங்க வந்த அம்மன் சப்பரம் தரையில் படுத்திருந்த பக்தா்களைத் தாண்டிச் சென்றதுபோது பக்தா்கள் பரவசமடைந்தனா்.
வரும் செவ்வாய்க்கிழமை வரை அம்மன் சப்பரம் வீதியுலா நடைபெறும். மாா்ச் 21ஆம் தேதி (திங்கள்கிழமை) இரவு அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியும், 22ஆம் தேதி காலை பக்தா்கள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறும். இதில், லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பதால் கரோனா தடுப்பு வழிமுறையைப் பின்பற்றுமாறு கோயில் நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


