காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

நாளை 420 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு

 ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம் 420 மையங்களில் சனிக்கிழமை (மாா்ச் 26) நடைபெறவுள்ளது.

Updated On :24 மார்ச் 2022, 11:27 pm

 ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம் 420 மையங்களில் சனிக்கிழமை (மாா்ச் 26) நடைபெறவுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், நகா்ப்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் என 420 மையங்களில் நடைபெறும் முகாமில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

இம்முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல், இரண்டாவது, பூஸ்டா் தடுப்பூசி செலுத்தப்படும். இப்பணியில் 66 வாகனங்கள், 1,680 பணியாளா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். தவிர 15 முதல் 18 வயதினருக்கும், 12 முதல் 15 வயதுடையோருக்கும் படிக்கும் பள்ளியிலேயே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற சுகாதார மையங்களிலும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த சிறப்பு முகாமில் 15 வயதுக்கு மேற்பட்டோரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.