குண்டம் விழாவையொட்டி, புஷ்ப ரதத்தில் சிம்ம வாகனத்தில் பண்ணாரி அம்மன் புதன்கிழமை இரவு திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
இக்கோயில் குண்டம் திருவிழா மாா்ச் 21, 22ஆம் தேதிகளில் விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவில் தமிழகம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த லட்சக்கணக்கான பக்தா்கள் குண்டம் இறங்கி தீ மிதித்து அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இந்நிலையில், பண்ணாரி அம்மன் கோயிலில் புஷ்ப ரத ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக, கோயிலில் கூடிய ஆயிரக்கணக்கான பக்தா்கள் மேளதாளம் முழங்க கோயில் வளாகத்தில் நடனமாடி மகிழ்ந்தனா். இதைத்தொடா்ந்து, மாடுகள் பூட்டப்பட்ட வண்டியில் மலா்கள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப ரதத்தில் சிம்ம வாகனத்தில் பண்ணாரி அம்மன் எழுந்தருளினாா்.
தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, புஷ்ப ரத ஊா்வலம் கோயிலில் இருந்து புறப்பட்டு பவானிசாகா் சாலை, தெப்பக்குளம் வரை சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


