அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஈரோட்டில் மளிகை கடையை திறக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி இளம் பெண் பலி

ஈரோட்டில் மளிகை கடையை திறக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி இளம் பெண் உயிரிழந்தார்.  

News image
ஈரோட்டில் மளிகை கடையை திறக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சரண்யா
Updated On :3 மே 2022, 7:30 am

DIN

ஈரோடு: ஈரோட்டில் மளிகை கடையை திறக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி இளம் பெண் உயிரிழந்தார்.  

ஈரோடு-பூந்துறை சாலையில் வாய்க்கால் மேடு பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் குமார். இவரது மனைவி சரண்யா.(28). இன்று காலையில் வழக்கம் போல் மளிகை கடைக்கு வந்த சரண்யா, இரும்பு கதவை திறக்க முயன்றார். 

அப்போது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திங்கள்கிழமை பெய்த மழையின் போது பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் மின் இணைப்புகளில் பழுது ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து இருக்கலாம் எனத்தெரிகிறது. சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு வட்ட காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.