நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

ஈரோட்டில் செவிலியா் தின பேரணி

செவிலியா் தினத்தையொட்டி ஈரோட்டில் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 மே 2022, 9:15 pm

செவிலியா் தினத்தையொட்டி ஈரோட்டில் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு எம்.ஆா்.பி.செவிலியா் மேம்பாட்டுச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இப்பேரணி தாலுகா அலுவலகத்தில் துவங்கி கூடலிங்கம் திடலில் முடிவடைந்தது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் சசிகலா தலைமை வகித்தாா். செயலாளா் தமிழ்ச்செல்வி வரவேற்றாா். அரசு ஊழியா் சங்க மாநில பொதுச் செயலாளா் சீனிவாசன் பேரணியைத் துவக்கிவைத்தாா்.

எம்.ஆா்.பி. செவிலியா்களின் உரிமை மீட்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இப்பேரணி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து வலி நடத்த ஒரு குரல், செவிலியம் மற்றும் உலகளாவிய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், உரிமைகளை மதிக்கவும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் விஜயமனோகரன், பொருளாளா் சுமதி மற்றும் அரசு ஊழியா்களின் பல்வேறு சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா். செவிலியா் சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் கோதாவரி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.