ஈரோடு: அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிப்பு

ஈரோட்டில் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது சிலைகளுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
ஈரோட்டில் அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிப்பு.
ஈரோட்டில் அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிப்பு.
Updated on
1 min read

ஈரோட்டில் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது சிலைகளுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள் மற்றும் பொதுமக்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அதிமுக ஈரோடு மாநகர் மாவட்ட கழகத்தின் அதிமுக அலுவலகமான அம்மா மாளிகையில் உள்ள ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சரும் ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகுமார சின்னையன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், கே.எஸ் தென்னரசு, சிவ சுப்பிரமணியம், மாவட்ட அவைத்தலைவர் பி.சி.ராமசாமி, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே சி பழனிச்சாமி, முன்னாள் மண்டல தலைவர்கள் கேசமூர்த்தி, மனோகரன், மாவட்ட ஜே பேரவை இணைச் செயலாளர் வீரக்குமார், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் நந்தகோபால், கங்காபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் பொங்கி, வீரப்பன்சத்திரம் எம்ஜிஆர் மன்ற செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட ஏறலாமான அதிமுகவினர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
தொடர்ந்து பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் உள்ள புரட்சி தலைவி அம்மா அவர்களின் திரு உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com