மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஈரோடு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழந்த இளைஞரை காப்பாற்றிய போலீசார்

ஈரோடு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞரை போலீசார் காப்பாற்றினர்.

News image
Updated On :22 ஜனவரி 2022, 10:26 am

DIN

ஈரோடு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞரை போலீசார் காப்பாற்றினர்.
ஈரோடு வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வட மாநிலத்திலிருந்து தினமும் 50- க்கும் மேற்பட்ட ரயில்கள் ஈரோடு வழியாக வந்து செல்கின்றன. இதில் நூற்றுக்கணக்கான வட மாநிலத்தவர்கள் பயணம் மேற்கொண்டு ஈரோட்டில் வந்து இறங்குகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் செகன்ராபாத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. 
இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் அசோக் தாஸ் என்ற இளைஞர் முன்பதிவு செய்து பணித்துள்ளார். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். விடுமுறைக்கு ஊருக்கு சென்றவர் மீண்டும் ஈரோட்டுக்கு திரும்பி ரயிலில் வந்து கொண்டிருந்தார். நேற்று ஈரோடு ரயில் நிலையத்திற்கு அசோக் தாஸ் பயணம் செய்த ரயில் வந்து நின்றது. அசோக் தாஸ் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார். 

இதனால் ரயில் ஈரோடுக்கு வந்தது அவருக்கு தெரியவில்லை. பின்னர் ரயில் பயணிகளை இறக்கி கொண்டு கிளம்பத் தொடங்கியது. ரயில் கிளம்பிய தொடங்கியதும் கண்விழித்து பார்த்த அசோக் தாஸ் ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில் கிளம்பியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவசரமாக எழுந்து தனது உடமைகளை முதலில் வெளியே வீசினார். பின்னர் அசோக் தாஸ் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றார். 

Story image


அப்போது தவறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே விழுந்தார். அப்போது அங்கு ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தலைமை காவலர்கள் பழனிசாமி மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு அசோக் தாஸை பிடித்து இழுத்து அவரை காப்பாற்றினர். பின்னர் அவருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். ரயில்வே போலீசார் வடமாநில வாலிபர் காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. 

Story image


துரிதமாக செயல்பட்டு வடமாநில இளைஞரை காப்பாற்றிய தலைமை காவலர்களை போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.