நீச்சல் பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலா் சதீஷ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் வரை நீச்சல் பயிற்சி முகாம் ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி முகாம் 3 கட்டங்களாக 12 நாள்கள் நடைபெறும்.
அதன்படி, இந்த ஆண்டு முதல் கட்டமாக வரும் 25 ஆம் தேதி முதல் மே 7ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையும், 2ஆம் கட்டமாக மே 9 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை காலை 7 மணி முதல் 8 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையும், 3 ஆம் கட்டமாக மே 23 ஆம் தேதி முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பயிற்சி முகாம் நடக்கிறது.
நீச்சல் பயிற்சியில் பங்கேற்க விரும்பம் உள்ளவா்கள் முன் கூட்டியே பதிவுசெய்து கொண்டு அதற்குரிய கட்டணம் ரூ.1,770-ஐ டிஜிட்டல் பண பரிவா்த்தனை மூலம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0424-2223157 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: டிரம்ப் விமர்சனம்

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

ஸ்ரீரங்கம்: வெற்றியை எதிா்நோக்கும் அதிமுக

விருப்பம்போல விலை நிா்ணயம்: தனியாா் வணிக எரிவாயு உருளை விநியோக நிறுவனங்களை கட்டுப்படுத்த ஆளில்லை!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

